×

பிரேசிலில் காலநிலை மாற்றத்தால் வாட்டி வதைக்கும் வெப்பம்; நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

பிரேசில்: பிரேசிலில் காலநிலை மாற்றத்தால் வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தை தணிக்க மக்கள் நீர்நிலைகளுக்கு சென்று பொழுதை இனிமையாக்கி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வழக்கமாக செப்டம்பர் மாதம் குளிர்காலம் நிலவும். ஆனால் காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் நீர்நிலைகளை நாடி செல்கின்றனர். தலைநகர் சாவ் பாலோவில் நீச்சல் குளங்கள், செயற்கை நீரூற்றுகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தை தணிக்க மக்கள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டும், நீர் நிலைகளில் குளித்தும், மகிழ்ந்தும் பொழுதை இனிமையாக்கி வருகின்றனர். இதனிடையே ரியோ டி ஜெனிரோ நகர மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் வெயிலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விலங்குகளின் தங்கும் இடங்களை குளிர்ச்சியாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு குளிர்ச்சியான உணவுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

The post பிரேசிலில் காலநிலை மாற்றத்தால் வாட்டி வதைக்கும் வெப்பம்; நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Brazil ,BRAZILE ,
× RELATED பிரேசிலில் வெள்ளப்பெருக்கில்...