×

வாங்கல் அருகே சேவலை வைத்து சூதாட்டம்

கரூர், செப். 26: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள திருமுக்கூடலூர் காட்டுப்பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் இரண்டு சேவல்கள் மட்டும் கிடந்துள்ளது.அதனை மீட்ட, போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டு, போலீசார் வருவதை அறிந்து தப்பியோடிய கும்பலை வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

The post வாங்கல் அருகே சேவலை வைத்து சூதாட்டம் appeared first on Dinakaran.

Tags : Wangal ,Karur ,Tirumukudalur forest ,Wangal, Karur ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...