×

வங்கி சாவியை மறந்து வீட்டில் வைத்த மேலாளர்

தவளக்குப்பம், செப் 26: புதுச்சேரி- கடலூர் மெயின் ரோடு அரியாங்குப்பம் பகுதியில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. 10 மணியளவில் வங்கியின் மேலாளர் மெயின் கதவை திறக்க முற்பட்டப்போது வங்கியின் மாஸ்டர் சாவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது பேக் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் சாவி கிடைக்கவில்லை. பிறகு யோசித்த மேலாளர் மாஸ்டர் சாவி வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். உடனே சாவியை எடுத்துவர வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் பொதுமக்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. அலுவலக பணிக்கு நேரத்தோடு செல்ல முடியாதால் சிலர் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் அங்கு இருந்த பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பின்னர் 11 மணியளவில் வங்கி மேலாளர் மாஸ்டர் சாவியுடன் வந்து வங்கியை திறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post வங்கி சாவியை மறந்து வீட்டில் வைத்த மேலாளர் appeared first on Dinakaran.

Tags : Thavalakuppam ,Indian Bank ,Arianguppam ,Puducherry- Cuddalore ,Dinakaran ,
× RELATED அரியாங்குப்பத்தில் பயங்கரம் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை