×

ஜிப்மரில் 28ம் தேதி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது

புதுச்சேரி, செப். 26: மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மரில் வரும் 28ம் தேதி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாடி நபியை (முகமது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு வரும் 27ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி (வியாழன்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 28ம் தேதி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். 27ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஜிப்மரில் 28ம் தேதி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது appeared first on Dinakaran.

Tags : Jipmar ,Puducherry ,Jibmar ,Milady Nabi ,Dinakaran ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு