×

ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி, செப்.26: ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ (57). திருமணம் ஆகி புஷ்பலதா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் பிரிட்டோ கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரிட்டோ, திடீரென மயங்கி விழுந்தார். அவர் தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சி கொல்லி மருந்தை அருந்தியது தெரியவந்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரிட்டோ சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Aralwaimozhi ,Aralvaimozhi ,Brito ,Senpakaraman Budoor Samathuvapuram ,Pushpalatha ,
× RELATED ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் காயம்