×

கோவையில் 3 டூவீலர்கள் திருட்டு

 

கோவை, செப். 26: கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம் (21). இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை ரத்தினபுரி ஊட்டி ஹவுஸ் அருகே நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.கோவை பேரூர் செட்டிபாளையம் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). புகைப்பட கலைஞர். இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை உப்பிலிபாளையம் சர்ச் அருகே நிறுத்தியிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை திருடி சென்று விட்டார். புகாரின் பேரில், வழக்குப்பதிந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர். கோவை சவுரிபாளையம் ரோடு கருணாநிதி நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர் (26). இவர் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். மறுநாள் இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரிசங்கர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post கோவையில் 3 டூவீலர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Gautham ,Ratnapura, Coimbatore ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...