- வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
- Kottampatti
- அட்டப்பட்டி ஊராட்சி
- தமிழ்நாடு அரசு
- வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
மேலூர், செப். 26: கொட்டாம்பட்டி அருகே அட்டப்பட்டி ஊராட்சியில், தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. அட்டப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி, முகாமினை துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரன் முகாமினை பார்வையிட்டார்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, பொது மருத்துவம், இசிஜி, ஸ்கேன், கண் மருத்துவம், தோல் நோய், சர்க்கரை நோய்க்கான நீர், ரத்த பரிசோதனை மற்றும் காசநோய் கண்டறிதலுக்கான டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்தல், சளி பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 946 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
The post கொட்டாம்பட்டி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.