×

கஞ்சா கடத்திய 3 பேர் கைது

 

சோழவந்தான், செப். 26: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் நான்கு வழிச்சாலையில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்.ஐ சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஆட்டோ, டூவீலரில் இருந்தவர்களை சோதனையிட்டபோது, அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், டூவீலரில் கஞ்சா கொண்டு வந்தவர் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பண்டார ஊத்து பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மகன் தர்மதுரை(29) என்பது தெரியவந்தது.

இவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கிச்செல்ல மதுரை அருள்தாஸ்புரம் வழிவிட்டான் மகன் லிங்கம்(23) என்பவரின் ஆட்டோவில், மேல உரப்பனூரைச் சேர்ந்த பவுன்குமார் மகன் சசிக்குமார் (33) வந்துள்ளார். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Thiruvalavayanallur ,Inspector ,Balraj ,S.I. Shekhar ,Dinakaran ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு