
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தம் உடல் உறுப்புகளை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது நாட்டின் முன்னுதாரண முயற்சி. முதல்வரின் இந்த நடவடிக்கையை இ.கம்யூனிஸ்ட் வரவேற்கிறது.
The post உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: முதல்வரின் முயற்சிக்கு முத்தரசன் வரவேற்பு appeared first on Dinakaran.