×

தனியார் கம்பெனியில் மேற்கூரை பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி: ஒருவர் காயம்

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கம்பெனியில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கயாபிரசாத் (37), குல்சான் (18). இருவரும், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் நேற்று மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 30 அடி உயரத்தில் உள்ள ஏணியில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கயாபிரசாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குல்சான் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், காயபிரசாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த குல்சான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தனியார் கம்பெனியில் மேற்கூரை பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி: ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Chungwarchatram ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...