×

கற்பக விநாயகா குளோபல் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த சின்ன கொளம்பக்கத்தில் உள்ள கற்பக விநாயகா குளோபல் பள்ளி 3ம் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கற்பக விநாயகா குளோபல் பள்ளி முதல்வர் ரெக்ஸ் மரிய பிரிட்டோ முன்னிலை வகித்தார். மாணவி அக்னிதா ஜெருஷா நார்மன் மற்றும் மாணவர் யஷ்வந்த் இருவரும் வரவேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, மாணவ – மாணவியரின் பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், வண்ணமயமான உடை அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர். இதில், அனைத்து நிகழ்ச்சிகளையும் பள்ளி மாணவ, மாணவியர் தொகுத்து வழங்கினர். இறுதியாக கற்பக விநாயகர் குளோபல் பள்ளி மாணவி தாரா மெரிபா நன்றி கூறினர்.

The post கற்பக விநாயகா குளோபல் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Karpaka Vinayaka Global School ,Chengalpattu District ,Patalam ,Kollampakkam ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...