×

இறைச்சி கடைக்காரருக்கு சரமாரி வெட்டு

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). இவர் அதே பகுதியில் கடை வைத்து பன்றிக்கறி விற்பனை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கோகுல் (25). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் உணவருந்திவிட்டு, குடும்பத்தினருடன் கோவிந்தசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த கோகுல், கோவிந்தசாமியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரடைந்த கோகுல் வீட்டுக்கு வெளியே வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, கோவிந்தசாமியை சரமாரி வெட்டியுள்ளார். இதில் கோவிந்தசாமிக்கு தலை, முதுகு, தாடை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. விழுந்தது. இதில் ஒரு காது அறுந்து விழுந்ததையடுத்து வலியில் கோவிந்தசாமி கதறினார்.

படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரின் அடிப்படையில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கோகுலை தேடி வருகின்றனர். கோகுல்மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இறைச்சி கடைக்காரருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Govindaswamy ,Nagammai, Tirumullaivayal ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...