×

குவைத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி: உடலைக் சொந்த ஊர் கொண்டுவர உறவினர்கள் வேண்டுகோள்..!!

தஞ்சாவூர்: குவைத்தில் உயிரிழந்த கும்பகோணத்தை சேர்ந்த தொழிலாளியின் உயிரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார். கும்பகோணம் அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (48). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 17 மற்றும் 12 வயதில் என இரு மகன்களும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. முருகேசன் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு சிறுநீரகக்கல் காரணமாக சிகிச்சை பெற தாயகம் வந்த இவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் குவைத் சென்றுள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மனைவி சத்யாவிடம் அலைபேசியில் முருகேசன் பேசி உள்ளார். பின்னர், இரவு 8 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அங்கிருந்து அலைபேசி வாயிலாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தனர். மேலும், முருகேசனின் உடலை விரைந்து தாயகம் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் மனைவி சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post குவைத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி: உடலைக் சொந்த ஊர் கொண்டுவர உறவினர்கள் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kuwait ,Thanjavur ,Kumbakonam ,India ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்