×

ரோட்டில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைத்த டிராபிக் எஸ்ஐ

பெரம்பலூர், செப். 25: பெரம்பலூர் நகரில் உள்ள 4 ரோடு பகுதியில் பெரம்பலூர் மாவட்ட ஹைவே டிராபிக் சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜன், நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்தார். அப்போது, நான்குரோடு – மூன்று ரோடு செல்லும் சாலையில் பணப்பை (பர்ஸ்) ஒன்று கிடந்தது. அந்த பணப் பையை எடுத்து, அதிலுள்ள முகவரியை விசாரித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலூக்கா, அன்ன மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளமுருகன் என்பவரது மகன் கிஷோர்குமார் (30) என்பது தெரியவந்தது. உடனே அவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் ரூ.2,050 அடங்கிய பணப் பையை (பர்ஸ்) பத்திரமாக ஒப்படைத்தார். நெடுஞ்சாலைத்துறை டிராபிக் எஸ்ஐ வரதராஜனின் செயலுக்கு, மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உள்ளிட்ட காவல்துறையினரும், சமூக ஊடகத்தினரும் பாராட்டினர்.

The post ரோட்டில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைத்த டிராபிக் எஸ்ஐ appeared first on Dinakaran.

Tags : SI ,Perambalur ,Varadarajan ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை