×

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நிழற்குடை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

கரூர், செப்.25: தேசிய நெடுஞ்சாலைகளில் நிழற்குடைகளின் அருகில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் வழியாக சேலம் மதுரை பைபாஸ் சாலை செல்கிறது. மாநிலத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த சாலையும் ஒன்றாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையத்தில் ஆரம்பித்து அரவக்குறிச்சி வரை இந்த சாலை பயணிக்கிறது. இதில், கரூர் மண்மங்கலம், தளவாபாளையம், செங்காட்டனு£ர் போன்ற பல்வேறு உட்பிரிவு கிராமங்களுக்கு சாலை பிரியும் இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

நிழற்குடைகளின் அருகிலேயே மினி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டங்களில் மினி டேங்க்குகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களும், நிழற்குடையின் அருகே நின்று பேரூந்து ஏறிச் செல்பவர்களும் இதனை பயன்படுத்தி வந்தனர்.ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மினி டேங்க்குகள் அனைத்தும் தண்ணீரின்றி காலியாக உள்ளது. இதனால், ஏராளமானோர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மினி டேங்க்குகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நிழற்குடை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nizhalkudai ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...