×

குடிநீர் குழாயை சேதப்படுத்திய மர்மநபர்

வருசநாடு, செப். 25: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில், அருகவேலி மலைக்கிராமம் உள்ளது. இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாயை மர்மநபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதையடுத்து குடிநீர் குழாயை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post குடிநீர் குழாயை சேதப்படுத்திய மர்மநபர் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Arugaveli hill village ,Muthalamparai panchayat ,Mailadumparai, Theni district ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்