×

எச்.ராஜா மீது மேலும் 5 பிரிவில் வழக்குப்பதிவு

சிவகங்கை: சிவகங்கையில் கடந்த 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற மதங்கள் குறித்து அவதூறாகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக சிவகங்கை நகர்மன்ற தலைவர், திமுக நகர செயலாளர் துரைஆனந்த் மற்றும் நிர்வாகிகள் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காளையார்கோவிலில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது சிவகங்கையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post எச்.ராஜா மீது மேலும் 5 பிரிவில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Sivagangai ,Vinayagar Chaturthi ,BJP ,H.Raja ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...