×

முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியின் மீது பைக் மோதிய விபத்து; புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

ஸ்ரீபெரும்புதூர்: முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் படப்பை, முருகாத்தம்மன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). திருவள்ளூரை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர்கள் இருவரும் ஒரகடம் அருகே உள்ள பனையூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்தனர். இருவரும் நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பனையூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி கவிழ்ந்தது.

இந்தவிபத்தில் கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒரகடம் போலீசார் வந்து கார்த்திக், மணிகண்டன் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிகண்டனுக்கு கடந்த 3ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. மேலும் மணிகண்டனின் 2 கண்களையும் தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்ததையடுத்து அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

The post முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியின் மீது பைக் மோதிய விபத்து; புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Pudumappilla ,Sriperumbudur ,Chennai ,Pudumapillai ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்