×

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரம்பூர்: ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி 2வது தெருவை சேர்ந்தவர் தங்க முனீஸ்வரன்.  இவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை பழைய டைல்ஸ்களை நீக்கிவிட்டு புதிய டைல்ஸ் பதிக்கும் பணியில் விஜய் (25) என்பவர் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் விஜயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.  மேலும், வழக்கு பதிவு செய்து, கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக வீட்டின் சுவர்கள் ஈரமாக இருந்ததால் அதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Thanga Muneeswaran ,Otteri Bhasyam Reddy 2nd Street ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு