×

அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய 35 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Meteorological Research Center Info ,Chennai ,Meteorological Centre ,Meteorology Center ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...