×

போதையில் பள்ளி பஸ்சை கடத்திய வாலிபர் கைது

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கோழியூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சை டிரைவர் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது பஸ்சை காணவில்லை. இந்நிலையில் வேப்பூர் அருகே அந்த பஸ், முன்னாள் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில் நின்றுள்ளது. வேப்பூர் போலீசார், பஸ்சில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்த அருணாச்சலம் (23) என்பதும், போதையில் சாலையோரம் நின்ற பள்ளி பஸ்சை கடத்தி ராமநத்தம், ஆவட்டி, வேப்பூர் வரை ஓட்டிசென்றதாகவும், லாரி மீது மோதி விட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post போதையில் பள்ளி பஸ்சை கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Kozhiyur ,Cuddalore district ,
× RELATED கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது