சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: போதுமான தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வராததால், செப்டம்பர் 15ம் தேதி வரை தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால், சுமார் 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது. நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35,000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். சுமார் ரூ.2,319 கோடி காப்பீட்டு தொகை செலுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, வெறும் ரூ.560 கோடி மட்டும் இழப்பீடாக பெற்றுள்ளது.
எனவே, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு, பாதிப்படைந்த வேளாண் நிலங்களை மீண்டும் ஒருமுறை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டு (நிவாரணம்) தொகையினை பெற்று தருமாறு வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post குறுவை சாகுபடி பாதிப்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.