×

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை

சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு அறிவித்ததற்கு என காங்கிரஸ் எம். எல்.ஏ.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம் ஆகும். மனித குல சேவைக்காக அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வரவேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.

உடல் உறுப்புக்கள் செயலிழந்துபோவதாலும், வேறு ஒருவரின் உறுப்புக்கள் கிடைக்காததாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர். தேவைப்படும் நபர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உடல் உறுப்புக்கள் கிடைக்கின்றன. மீதியுள்ள 90 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா? மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Congress MLA ,Selvaperunthagai ,Chennai ,Congress ,M. ,L.A. ,Selvaperunthakai ,MLA Selvaperunthakai ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கு!: உச்சநீதிமன்றம்...