×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி காளையார் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாகவும், இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாக பேசியதாகவும் எச்.ராஜா மீது காளையார் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி அளித்த புகாரில், முதல்வர், அமைச்சரை அவதூறாக பேசியதோடு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காளையார் கோவில் மக்களிடையே இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் மோதல் போக்கை உருவாக்கும் எண்ணத்தோடு பேசியதாக புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM ,G.K. Stalin ,Minister ,Udhayanidi Stalin ,Sivagangai ,Stalin ,B.C. G.K. Stalin ,Minister Udhayanidi Stalin ,H.R. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...