- திருவிடைமருதூர் ஊராட்சி
- நாச்சியார்கோவில்
- திருவிடைமருதூர்
- திருவிடைமருதூர் மக்களவைத் தொகுதி
- கோவி செழியன்
- தின மலர்
திருவிடைமருதூர், செப்.23: நாச்சியார்கோவில் ரேஷன் கடையில் திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாச்சியார்கோவில் ஊராட்சி பாரதி நகரில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு அரசு தலைமை கொறடாவும், திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தரமாகவும், எடை சரியானதாகவும் உள்ளதா, பொருட்களின் கையிருப்பு சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் நாச்சியார்கோவில் ஊராட்சி செயலாளர் பூபதி, ஒன்றிய பிரதிநிதி உமாசங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post நாச்சியார்கோவில் ரேஷன் கடையில் திருவிடைமருதூர் எம்எல்ஏ திடீர் ஆய்வு appeared first on Dinakaran.