×

திருமணத்திற்கு முன்பு நான் கெட்ட பையனா? தொழிலாளியை சரமாரியாக அடித்து உதைத்த வாலிபர் மார்த்தாண்டம் அருகே பரபரப்பு

மார்த்தாண்டம், செப். 23 : மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(55). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அஜி(35). கொத்தனார். அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில் அஜியின் மனைவியை சந்தித்த நாகராஜன், உன் கணவர் அஜி திருமணத்துக்கு முன்பு கெட்டப்பையனாக சுற்றித் திரிந்தான். இப்போது எப்படி இருக்கிறான்? ஒழுங்காக நடந்து கொள்கிறானா? என்று கேட்டாராம். இது குறித்து அஜியிடம் அவரது மனைவி கூறி விட்டார். இதனால் தன்னை குறித்து தனது மனைவியிடம் தவறாக பேசிய நாகராஜன் மீது அஜி கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை அஜி வழிமறித்தார். எப்படி எனது மனைவியிடம் என்னைப்பற்றி தவறாக கூறலாம்? எனக்கேட்டு காலால் நாகராஜனின் நெஞ்சில் மிதித்து கீழே தள்ளினாராம். மேலும் அவரை சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாகராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகராஜன் அளித்த புகாரின்பேரில் அஜி மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணத்திற்கு முன்பு நான் கெட்ட பையனா? தொழிலாளியை சரமாரியாக அடித்து உதைத்த வாலிபர் மார்த்தாண்டம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Nagarajan ,Melapalam ,Aji ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில்...