×

நர்சிங் பட்டப்படிப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: இ.எஸ்.ஐ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: இ.எஸ்.ஐ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: இ.எஸ்.ஐ செவிலியர் கல்லூரியில் காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பி.எஸ்.சி (நர்சிங்) பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இ.எஸ்.ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெறுவதற்கு www.esic.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கர்நாடகா, குல்பர்கா, இ.எஸ்.ஐ செவிலியர் கல்லூரியில் 20 இடங்களும், பெங்களூரு, இந்திரா நகர், இ.எஸ்.ஐ செவிலியர் கல்லூரியில் 20 இடங்கள் என இ.எஸ்.ஐ காப்பீட்டாளர் ஒதுக்கீட்டின் கீழ் 40 இடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இ.எஸ்.ஐ கிளை அலுவலகம், துணை மண்டல அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண் 044-28306333, 044-28306363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post நர்சிங் பட்டப்படிப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: இ.எஸ்.ஐ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ESI ,CHENNAI ,ESI Management ,ESI College of ,Dinakaran ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்