
சென்னை: நீட் தேர்வில் ஒன்றிய அரசு வஞ்சகமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடக்கும்போதே நீட் தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியானது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை படிப்புக்கு நீட் அவசியமில்லை என ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றிய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது என அவர் கூறினார்.
The post நீட் தேர்வில் ஒன்றிய அரசு வஞ்சகமாக செயல்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.