×

கும்பகோணத்தில் அதிக போதைக்காக கிருமி நாசினியில் போதை மாத்திரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு..!!

கும்பகோணம்: கும்பகோணத்தில் அதிக போதைக்காக கிருமி நாசினியில் போதை மாத்திரை கலந்து குடித்த இருவர் உயிரிழந்தனர். கும்பகோணத்தை சேர்ந்த சௌந்தரராஜன் மற்றும் பாலகுரு கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். நேற்று இரவு இருவரும் சக்கரப்படித்துறையில் உள்ள ஆற்றங்கரைபுரம் அமர்ந்து போதை மாத்திரைகளை சாப்பிட முற்பட்டுள்ளனர். அப்போது கிருமி நாசினியில் போதை மாத்திரையை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

போதை மாத்திரையுடன் கிருமி நாசினியை கலந்து குடித்த இருவரும் ஆற்றங்கரையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் கரையோரம் சடலங்களை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதல் கட்ட தகவலில் கிருமி நாசினியில் இருவரும் போதை மாத்திரை கலந்து குடித்து தெரியவந்துள்ளது. இது குறித்து கும்பகோண நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கும்பகோணத்தில் அதிக போதைக்காக கிருமி நாசினியில் போதை மாத்திரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Soundarajan ,Kumbagonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...