
சென்னை: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி காவிரியில் வினாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பை அமல்படுத்தாவிடில் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
The post கர்நாடக அரசு காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.