×

டூவீலர், வைக்கோல் போருக்கு தீ வைத்த விவசாயி கைது

கெங்கவல்லி, செப்.22: கெங்கவல்லி அருகே, புனல்வாசல் வடக்கு மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(66). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கும், பெரிய புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் சிவகுமார்(39) என்பவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி மாலை, சுப்ரமணி வீட்டிற்கு சென்ற சிவகுமார், போதையில் டூவீலர் மற்றும் வைக்கோல் போருக்கு தீ வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, தலைமறைவான இருந்த சிவகுமாரை நேற்று கைது செய்தனர். பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையிலடைத்தனர்.

The post டூவீலர், வைக்கோல் போருக்கு தீ வைத்த விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Wheeler ,Kengavalli ,Subramani ,Punalvasal North Manakkad ,Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருட்டு