×

பெரவள்ளூரில் போராட்டம் 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜவகர் நகர் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பணி வழங்க வேண்டும் என கோரி ஒன்றுகூடினர். கொளத்தூர் காவல் துணை கமிஷனர் சக்திவேல் மற்றும் அண்ணா நகர் துணை கமிஷனர் ரோஹித்நாதன் தலைமையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்களிடம் சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்கே தலைமையில் 4 துணை கமிஷனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் மூலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்தை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 4 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பெரவள்ளூரில் போராட்டம் 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Protest ,Peravallur ,Perambur ,Jawagar Nagar ,Kolathur… ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...