
சென்னை: உலக அமைதி நாளை முன்னிட்டு ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை:
உலக நாடுகளில் உலக அமைதி நாள் (செப்டம்பர் 21ம் தேதி) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடுகளிடையே பகைமை, போட்டி, ஆக்கிரமிப்பு, சுரண்டல் போன்ற சுயநல போக்கை தவிர்த்து அன்பு பாராட்டுதல், நட்புடன் நேசித்தல், மற்றவற்றின் இறையாண்மையை மதித்தல், நல்லிணக்க மனித நேய உணர்வுடன் ஈடுபாடு கொண்டால் உலகில் அமைதி மேம்படும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post ஜி.கே.மணி உலக அமைதி நாள் வாழ்த்து appeared first on Dinakaran.