×

தொடர் மழைக்காரணமாக செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்: மின்சாரம் துண்டிப்பு, பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் தொடர் மழைக்காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாயினர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னல்களுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசைகட்டி நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால், சரியான நேரத்திற்க்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் செங்கல்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்ட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

The post தொடர் மழைக்காரணமாக செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்: மின்சாரம் துண்டிப்பு, பொதுமக்கள், வியாபாரிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டில் மதுபோதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது