×

விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்: தாய் வீட்டு சீதனம் வழங்கி கவுரவிப்பு

சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அங்கு பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவருக்கு போலீசார் அனைவரும் வளைகாப்பு நடத்தினர். சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பெண் காவலராக அன்பரசி பணியாற்றி வருகிறார். அன்பரசிக்கு திருமணம் நடந்து தற்போது 9 மாதம் நிறைமாத கர்ப்பணியாக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் காவலர் அன்பரசிக்கு காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் காவலர்கள் வளைகாப்பு நடத்த இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதேநேரம், காவலர் அன்பரசி மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் இருவர் தலைமையில் விருகம்பாக்கம் காவல் நியைத்தில் நேற்று பெண் காவலர் அன்பரசிக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது சக பெண் காவலர்கள், சந்தனம் குங்குமம் வைத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் இருவரும் தாய் வீட்டு சீதணம் போல் பூ, பழங்கள் தாம்பூளம் வழங்கி கவுரவித்தனர்.

The post விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்: தாய் வீட்டு சீதனம் வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Virugampakkam police station ,CHENNAI ,Virugambakkam police station ,Chennai… ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...