×

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை.! சிபிசிஐடி முடிவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே வேங்கைவயல், இறையூரை சேர்ந்த 25 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேங்கைவயல், இறையூரை சேர்ந்த மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்.இதற்கிடையில் ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அதன் முடிவுகள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

The post வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை.! சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.

Tags : VENGAIVAL ,CPCID ,Pudukkotta ,CPCIT ,Vengaivayal ,Pudukkoti ,Bengal Affair ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...