×

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு வாந்தி, மயக்கம்: அதிகாரிகள் கடைக்கு சீல்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 200 பேருக்கு கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வரும் சக்தி பாஸ்ட் புட் என்கின்ற கடையிலிருந்து நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி வந்து பணி செய்யும் இடத்தில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று 12 பெண்கள் 14 ஆண்கள் என 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 26 வடமாநில தொழிளாலர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் சக்தி பாஸ்ட் புட் கடையின் உரிமையாளர் சென்னப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முதற்கட்டமாக சக்தி சிக்கன் ரைஸ் கடையின் உள்ள சிக்கன் மற்றும் உணவு பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வந்த சக்தி பாஸ்ட் புட் கடைக்கு கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, மற்றும் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளார். மேலும் கடைக்கு முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் சமர்பித்த பின் கடை மீண்டும் திறக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

 

The post கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு வாந்தி, மயக்கம்: அதிகாரிகள் கடைக்கு சீல்! appeared first on Dinakaran.

Tags : krishnagiri ,Delta ,Sipkat Industrial Park ,Kuruparapalli ,Krishnakiri ,Dinakaran ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு