×

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் பதில் அளிக்க குறுகிய கால அவகாசம் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதிமுகவால் நியக்கப்பட்டோரை நீக்குவது, வேட்பாளர்களை அறிவிப்பது என தங்களுக்கு இணையாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் தொண்டர்களிடையே குழப்பம் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

The post அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,OPS ,Chennai ,Chennai High Court ,O. Panneerselvam ,Edappadi Palaniswami ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...