
ராமநாதபுரம் : நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரை திரும்பி உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி, தலைமன்னார் இடையேயான பகுதியில் மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை 5க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சுற்றி வளைத்தும் மீனவர்களை தாக்கி விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தாங்கள் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் மீன்பிடிக்காமல் கவலையுடன் மீனவர்கள் கரை திரும்பினர். ஏற்கனவே கடந்த 15ம் தேதி மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடித்த சம்பவத்திற்கு தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு!! appeared first on Dinakaran.