×

உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசுக்கு எதிராக காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் போராட்டம்..!!

தஞ்சாவூர்: காவிரியில் உரிய தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து இம்மாத இறுதியில் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெல்ட்டாவில் கருகும் குருவை நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு

காவிரி நீரை பெற்று தரக்கோரி தஞ்சையில் 10 விவசாய சங்கங்கள் இணைந்து காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் எனும் பெயரில் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். காலை முதல் மதியம் வரை தொடர்ந்து முழக்கம் எழுப்பிய அவர்கள் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி மாதவாரியாக தண்ணீரை கர்நாடக அரசு விரைந்து வழங்கிடவும் தமிழ்நாட்டிற்கான நீரை ஒன்றிய அரசு பெற்று தருமாறும் வலியுறுத்தினர்.

The post உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசுக்கு எதிராக காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka government ,Thanjavur ,Delta ,Karnataka Govt ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...