×

மழைநீரை பயன்படுத்தி கழிவுகளை வெளியற்றும் ஆலைகள்: சிப்காட் பகுதியில் நீராதாரங்கள் பாதிப்பு

கோவை: பெருந்துறை சிப்க்காட்டில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்க்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் விதிகளை பின்பற்றாமல் ஆலைக்கழிவுகளை வெளியேற்றுவதால் சிப்காட் பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு குளங்களும், நிலத்தடி நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் குறி வருகின்றனர்.

நேற்று மாலை பெய்த கனமழையை பயன்படுத்தி மழைநீருடன் கழிவுகள் திறந்துவிடப்பட்டதால் 400 ஏக்கர் பரப்பளவிலான குளம் மாசு அடைவதாகவும் மக்கள் தெரிவித்த நிலையில் 4 சாய தொழிற்சாலைகள் விதிகளை பின்பற்றாமல் கழிவு நீரை வெளியேற்றியதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஆகஸ்ட் 30ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை 3 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு நடத்திய ஆய்வில் இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த 4 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து உடனடியாக மூடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

The post மழைநீரை பயன்படுத்தி கழிவுகளை வெளியற்றும் ஆலைகள்: சிப்காட் பகுதியில் நீராதாரங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chipkot ,Coimbatore ,Perundurai Chipkot ,Perundurai ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...