×

பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தேர்வான இளைஞருக்கு நிதி உதவி: முருகேசன் எம்எல்ஏ வழங்கினார்

 

பரமக்குடி, செப்.20: பரமக்குடி அருகே வேந்தோணி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(30). தனது பள்ளி பருவத்திலேயே இரண்டு கைகளையும் இழந்த சுந்தரபாண்டியன் மனம் தளராமல் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். நீச்சல் அடிப்பதில் ஆர்வமாக இருந்தவர் மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான பாரா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்கு போதுமான நிதி வசதி இல்லாததை அறிந்த பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் நேற்று சுந்தரபாண்டியனை சந்தித்து நிதி உதவி வழங்கினார். பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தேர்வான இளைஞருக்கு நிதி உதவி: முருகேசன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Para Olympic swimming competition ,Paramakudi ,Sundarabandian ,Saraswati Nagar ,Vendoni ,Para Olympic ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்