
வேலூர்: வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகே அகழியில் நேற்று மதியம் மூட்டை கட்டிய நிலையில் சடலம் மிதந்துள்ளது. அகழி கரைமேல் ெதர்மாகோல் மீது ரத்தக் கறைகளும், தரை விரிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி மீட்டனர். மூட்டைக்குள் வாலிபரின் சடலம் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? கொலை செய்து மூட்டைக்குள் கட்டி வீசியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
The post வாலிபரை கொன்று வேலூர் கோட்டை அகழியில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.