×

செங்கல் சூளை புகையில் சிக்கி தம்பதி பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்படி புதூரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(40). இவரது மனைவி அமுலு(35). மகள்கள் சந்தியா(15), சினேகா(13), மகன் அரவிந்த்(12). தெய்வசிகாமணியும், அமுலுவும் அதே ஊரில் ஏரியில் இயங்கி வரும் புதூரை சேர்ந்த பழனி என்பவரின் செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைப்பதற்காக தீ மூட்டப்பட்டிருந்ததால், பாதுகாப்புக்காக சூளையை ஒட்டியுள்ள அறையில் தம்பதியர் தங்கியுள்ளனர்.

செங்கல் சூளையில் தீ அணையாமல் இருப்பதற்காக அறையுடன் இணைத்து தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர், கணியம்பாடி உட்பட மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சூளையில் தீ அணைந்தது. இதனால் கிளம்பிய புகை குபு, குபுவென பரவி அறையிலும் சூழ்ந்தது. இதனால் தூக்கத்தில் இருந்த கணவனும், மனைவியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

The post செங்கல் சூளை புகையில் சிக்கி தம்பதி பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Deevasigamani ,Pudur, Vellore district ,amulu ,Chandya ,Sinega ,Arvind ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...