×

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: டிடிவி.தினகரன் வேண்டுகோள்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

The post மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: டிடிவி.தினகரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DTV.Thinakaran ,CHENNAI ,AAMUK ,General Secretary ,DTV Dinakaran ,Twitter ,North East Monsoon, Chennai ,DTV ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...