×

ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி சிக்கன் சப்ளை வியாபாரி கைது

நாமக்கல்: நாமக்கல் – பரமத்தி ரோட்டில் ஐவின்ஸ் ரெஸ்டாரென்டில் கடந்த, 16ம் தேதி ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வாங்கி சாப்பிட்ட, சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14), வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். ஓட்டல் உரிமையாளர் நவீன்குமார் (27), சமையலர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மககுத் (27), தபாஸ் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அந்த ஓட்டலுக்கு கெட்டுப்போன கோழிக்கறியை சப்ளை செய்த ராமாவரம்புதூரில் உள்ள கறிக்கோழி கடை உரிமையாளர் சீனிவாசனை (44) நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி சிக்கன் சப்ளை வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Shawarma ,Namakkal ,Ivins ,Namakkal – Paramathi ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...