×

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை: விஜய் தாய் சோபா, நடிகை குஷ்பூ நேரில் சென்று ஆறுதல்

சென்னை: சென்னையில் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 16வயது மகள் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் அவரது அறைக்கு சென்ற விஜய் ஆண்டனி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உதவியாளருடன் சேர்ந்து மகள் உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஜய் ஆண்டனி வீட்டில் தடைய அறிவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர். விஜய் ஆண்டனி மகள் பயன்படுத்திய செல்போனையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள போலீசார் அவர் படித்த பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு மேல் மனசோர்வுடன் காணப்பட்ட அவர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் பள்ளி விடுமுறை நாளான நேற்று தனது தோழிகளை சந்திக்க விஜய் ஆண்டனி மகள் வெளியே சென்றுள்ளார்.

அதன் பின் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி மகள் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தயார் ஷோபா சந்திரசேகர், நடிகை குஷ்பு ஆகியோர் விஜய் ஆண்டனி இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதே போல நடிகர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post விஜய் ஆண்டனி மகள் தற்கொலை: விஜய் தாய் சோபா, நடிகை குஷ்பூ நேரில் சென்று ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Vijay ,Sopha ,Khushboo ,Chennai ,Soba ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...