×

சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏவை பயன்படுத்துகிறது பாஜ: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கும்பகோணம்: சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏவை பாஜ பயன்படுத்துகிறது என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள் அறிக்கை: அரபு மொழியை கொச்சைப்படுத்தும் வகையிலும், அதை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதும், அரபு மொழி புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்று பொத்தாம் பொதுவாக ஒரு மொழியை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவதும் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் என்.ஐ.ஏ ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. என்ஐஏ என்பது பாஜ அரசின் கைக்கூலியாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் புலனாய்வு அமைப்பாக விளங்குகிறது.

அமலாக்கத்துறையை வைத்து எதிர்கட்சி தலைவர்கள் எவ்வாறு வேட்டையாடப்படுகிறார்களோ, அதே பாணியில் சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏ பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திடம் அத்துமீறும் போக்கை என்ஐஏ கை விட வேண்டும். பாஜ தூண்டுதலின் பேரில் சோதனை என்ற பெயரில் என்.ஐ.ஏ அமைப்பு தமிழ்நாட்டில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு காவல்துறையே விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏவை பயன்படுத்துகிறது பாஜ: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : NIA ,Baja ,Jawahirilla ,Kumbakonam ,Jawahirullah ,MLA ,Mamaka ,President ,Jawahirullah M. l. A ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...