×

போபால் பேரணி ரத்தான நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கே?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

புதுடெல்லி: இந்தியா கூட்டணியின் முதல் பேரணி கூட்டம் போபாலில் நடத்தவிருந்த நிலையில், அக்கூட்டம் ரத்தான நிலையில் அடுத்த கூட்டம் குறித்து இன்னும் முடிவெடுக்க வில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கூறினார். ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் அறிவிக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கடந்த சனிக்கிழமை அறிவித்த திடீர் அறிவிப்பில், ‘வரும் அக்டோபர் மாதம் போபாலில் ‘இந்தியா’ கூட்டணி நடத்தவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் பேரணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அடுத்த கூட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். இன்னும் இடம், நாள் குறித்து முடிவு செய்யப்படவில்லை’ என்றார்.

The post போபால் பேரணி ரத்தான நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கே?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து appeared first on Dinakaran.

Tags : India ,Bopal Rally Ranth ,New Delhi ,India Alliance ,Bopal ,Ratana ,Bopal Rally Ruling ,Congress ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை