×

வருசநாடு அருகே குண்டும், குழி சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி

வருசநாடு : வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் தினமும்  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் நடந்து செல்லும் போது சாலையில் உள்ள கற்கள் குத்தி காயமடைகின்றனர். மேலும் டூவீலர், ஆட்டோக்களில் செல்லும் போது டயர்களை ஜல்லிக்கற்கள் பஞ்சராக்கி விடுகின்றன. இதனால் அன்றாடம், இச்சாலையால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட பணிகளுக்கு, பள்ளிகளுக்கு செல்பவர்கள் வாகனங்கள் பஞ்சராவதால் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் மூன்று கி.மீ தொலைவில் உள்ள சிங்கராஜபுரம் செல்ல வேண்டும். ஆனால், சாலை வசதியில்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் ஆட்டோக்களில் செல்ல வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கொடுத்தும், பாதி தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, எங்கள் பண்டாரவூத்து கிராமத்திற்கு தார்ச்சாலை வசதியை செய்து தர வேண்டும் என்றனர்….

The post வருசநாடு அருகே குண்டும், குழி சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Bandaravuthu hill ,Singarajapuram ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்